பெண்களுக்கான கைப்பந்துப் போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக அணி முதலிடம்

நாமக்கல் மாவட்டத்தின் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பெண்களுக்கான கைப்பந்துப் போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக் கழக அணி முதல் பரிசை வென்றது,

பாச்சல் பகுதியில், தென்மண்டல அளவில் பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. தென் இந்தியாவைச் சேர்ந்த 37 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், சென்னை அண்ணா பல்கலைகழக அணி முதல் பரிசைப் பெற்றது. வெற்றிபெற்ற அணிக்கு சான்றிதழ் மற்றும் பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. ஏராளமான மாணவ மாணவிகள் இப்போட்டியைக் கண்டு களித்தனர்.

Exit mobile version