சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 18 ஆவது தமிழ் இணைய மாநாட்டின் துவக்க விழா

18ஆவது தமிழ் இணைய மாநாட்டின் துவக்க விழா சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

துவக்க விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், அண்ணா பல்கலைக் கழக் துணை வேந்தர் சூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், இணைய தகவல் தொடர்பில் தமிழ் மொழியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், இணையத்தில் தமிழ் மொழி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், ஆய்விற்கு இந்த மாநாடு முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.

Exit mobile version