சத்தீஷ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது – நக்சல் பாதிப்புக்கு உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு 

சத்தீஷ்கர் மாநிலத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

90 தொகுதிகள் கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சத்தீஷ்கரில் நக்சல் தாக்குதல் அதிகமாக இருப்பதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக தண்டேவடா உள்ளிட்ட பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் என்பதால், ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 12ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 

 

Exit mobile version