தொரட்டி பட நாயகி தயாரிப்பு நிறுவனம் மீது குற்றச்சாட்டு

படத்தின் விளம்பரத்திற்காக தயாரிப்பு நிறுவனம் தாம், கடத்தப்பட்டதாக பொய் கூறியுள்ளது என்று ’தொரட்டி’பட நாயகி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ’தொரட்டி’ பட நாயகி, படத்தை பப்ளிசிட்டி செய்வதற்காக தாம் கடத்தப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் பொய் கூறியுள்ளது என்று தெரிவித்தார். நல்ல படத்திற்கு இதுபோன்ற எதிர்மறை விளம்பரம் தேவைதானா என்று கேள்வி எழுப்பிய நடிகை தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார்.

தயாரிப்பு நிறுவனத்தினர் ஊடகங்கள் மூலம் தாங்கள் செய்தது தவறு என்று ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், சட்ட ரீதியாக இந்த விஷயத்தைக் அனுகுவேன் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version