பொறியியல் படிப்பில் அரியர் தேர்வு முறையில் மாற்றம்?

பொறியியல் படிப்புகளில் அரியர் தேர்வு முறையில் கொண்டு வந்த மாற்றம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் அரியர் தேர்வுகளை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே எழுதும் வகையில் இருந்து வந்தது. அதேபோல் ஒரு பருவத்தில் 3 அரியர் பாடங்களை மட்டுமே எழுத முடியும்” என அண்ணா பல்கலைகழகம் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பல்கலை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், அண்ணா பல்கலை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் பொறியியல் படிப்புகளில் அரியர் தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து பரிசீலனை நடத்தப்பட்டு வருவதாகவும், மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version