சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் திட்டமிட்டபடி இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது.

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ தயாரித்து வந்தது. நிலவின் தென் துருவ பகுதியை உலகில் முதன் முறையாக, ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், சந்திரயான்-2 விண்கலம், அறிவித்தப்படி கடந்த 15-ந் தேதி அதிகாலை 2:51க்கு விண்ணில் செலுத்தும் வகையில், கவுன்டவுன் தொடங்கியது. இந்நிலையில் திடீரென்று கடைசி நேரத்தில் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விண்கலத்தை விண்ணில் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான தொழிற்நுட்ப ஒத்திகைகள் வெற்றிகரமான நடத்தப்பட்ட நிலையில், கவுன்வுடன் தொடங்கியது. இதையடுத்து திட்டமிட்டப்படி இன்று பிற்பகல் 2.43 மணி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதற்கிடையே, சந்திரயான்-2 விண்கலம் திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவில் ஆய்வு செய்ய, புதிய இடத்தில் தரையிறங்கும் சந்திரயான் மூலம், பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

Exit mobile version