தெலங்கானா முதலமைச்சராக இரண்டாவது முறையாக சந்திரசேகர ராவ் பதவியேற்பு 

தெலங்கானா முதலமைச்சராக இரண்டாவது முறையாக சந்திரசேகர ராவ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் கடந்த 7ம் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 11ம் தேதி நடைபெற்ற நிலையில், மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை கைப்பற்றி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

 

 

Exit mobile version