கருப்பு சட்டை அணிந்து தலைமைச் செயலகம் வந்த சந்திரபாபு நாயுடு

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து தலைமைச் செயலகம் வந்தனர். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையொட்டி பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அம்மாநில அமைச்சர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வந்தனர்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய மோடி அரசு உறுதி அளித்திருந்த நிலையில், அந்த கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Exit mobile version