இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!

இராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இதேபோல் சென்னை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு குமரிக் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version