கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழ்நாட்டின், கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக, ஜனவரி ஒன்றாம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், நாகை, கடலூர், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இரண்டாம் தேதி கடலோர மாவட்டங்கள், மயிலாடுதுறையிலும், மூன்றாம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மிதமான மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வரை, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version