கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும், சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி, மணல்மேடு, திருவாரூர் மாவட்டம் குடவாசல், நன்னிலம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Exit mobile version