தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 7 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும் எனவும், நாளை உள்தமிழகம், தெற்கு கடலோர தமிழகம், நீலகிரி, கோவை, மதுரை, தேனி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. 60கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், 22-ம் தேதி வரை அரபிக்கடல், கர்நாடக, கேரள கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version