தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 48 மணி நேரத்திற்கு, கோவை, திண்டுக்கல், நீலகிரி, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறைக்காற்று வீசும் என்பதால், அரபிக்கடல், மத்திய கிழக்கு, லட்சத்தீவு, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version