தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மதுரை, சிவகங்கை, திருச்சி, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழையும், விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல், மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தவிர, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல், தென்கிழக்கு வங்கக் கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version