தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவ மழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகம், புதுவையில் ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்மேற்கு பருவ மழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version