முதலமைச்சரை சந்தித்த "Saint Gobain" நிறுவன தலைவர் பேச்சுவார்த்தை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தாங்கள் செய்யவுள்ள புதிய முதலீடுகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, “saint gobain” நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, சென்னை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, “saint gobain” நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பி. சந்தானம், நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் “saint gobain” நிறுவனம் செய்யவுள்ள புதிய முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Exit mobile version