தமிழகத்திற்கு ரூ.18 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை மத்திய அரசு வழங்கவில்லை- தம்பிதுரை

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 18 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம் தாந்தோன்றி ஊராட்சியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பின்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார்.

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவின் நிதி நிலையை பெருக்கும் சிறந்த நிர்வாகி என்று கூறினார். ஆனால் தமிழகத்திற்கு வர வேண்டிய 18 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்று கூறிய அவர், இதனால் மாநில அரசின் அதிகாரங்களை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version