கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை மத்திய அரசு அங்கீகரிக்க கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் திருவிழாவை, மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என மக்களவை அதிமுக உறுப்பினர் ரவீந்தரநாத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் நடைபெற்ற மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

Exit mobile version