நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்தவித சமரசமும் செய்யாது: பிரதமர் மோடி

நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்தவித சமரசமும் செய்யாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கார்கில் போர் வெற்றியின் 20ம் ஆண்டு நினைவு தின கொண்டாட்ட விழா நடைபெற்றது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்கில் யுத்தத்தில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில், பாதுகாப்புப் படையினரின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

வீரர்களின் ராணுவ மரியாதையும், வீர வணக்கங்களும், ஆப்பரேஷன் விஜய் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்தவித சமரசமும் செய்யாது என்று தெரிவித்தார். சர்வதேச அளவில் போர் சூழல் மாறி உள்ளதால், அதற்கு ஏற்ப இந்திய முப்படைகளும் நவீனமயமாக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். 

Exit mobile version