நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்கள் 

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும், நாளையும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் இன்றும் நாளையும், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில், அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்குமாறு, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும், மத்திய அரசு ஊழியர்கள் 15 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version