தாக்குதல் குறித்து விளக்க எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நிலை மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனிடையே, பாகிஸ்தானில் நடத்தப்பட்ட இந்திய விமானப்படையின் தாக்குதல் குறித்து விளக்க எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கமளிக்கவுள்ளார்.

Exit mobile version