கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு!

அரியலூர் மாவட்டம் செந்துறையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.மத்திய குழுவினர் சார்பில் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பாண்டிச்சேரி ஜிப்பர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் தினேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமையில் துறை அலுவலர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செந்துறை அருகிலுள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

Exit mobile version