முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை!!

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து, மத்திய சுகாதாரக்குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை மற்றும் இனி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு நியமித்துள்ள சுகாதாரக்குழு, நேற்று முன்தினம் சென்னை வந்தது. இக்குழு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கிங்ஸ் வளாகத்தில் உள்ள கொரோனா மருத்துவமனை, நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version