முதல்வருடன் மத்தியக் குழு ஆலோசனை!

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்தியக் குழு கடந்த 5ம் தேதி தமிழகம் வந்தடைந்தது. இதனையடுத்து, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மத்திய குழு நேரில் ஆய்வு செய்தது. அப்போது, புயல் பாதிப்புகள் குறித்து மக்களிடம் மத்தியக் குழு கேட்டறிந்தது. இந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய மத்தியக் குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. இன்று மாலை டெல்லி திரும்பும் மத்தியக் குழு, ஓரிரு நாளில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version