தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைக்கு மத்திய குழு பாராட்டு!!!

தமிழகத்தில், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு முறையை, மத்திய குழு வெகுவாக பாராட்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, அம்மா உணவகத்திற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் விஜயபாஸ்கர் நகராட்சி ஆணையரிடம் வழங்கினார். மாவட்ட வர்த்தக சங்கத்தின் சார்பாக, முதலமைச்சர் நிவாரண நிதிக்காக, 9 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் அமைச்சரிடம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசின் நோய் தடுப்பு பணிகளை மத்திய அரசு வெகுவாக பாராட்டியதாக கூறினார்.

Exit mobile version