மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன், நிர்மலா சீதாராமன் ஆலோசனை

மத்திய பட்ஜெட் தொடர்பான மாநில நிதி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

வரும் 5 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதற்கான பணிகளில் மும்முரமாக இருக்கும் அவர், துறை வாரியான பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், மாநிலங்களின் கருத்துக்களை கேட்டறியும் வகையில், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, தமிழகத்திற்கு தேவைப்படும் நிதி குறித்து கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதேபோல், பிற மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று தங்கள் மாநிலங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Exit mobile version