செம்மரம் வெட்டிக் கடத்தியதாக 5 பேர் போலீசார் கைது

திருப்பதியில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக, சென்னையை சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்..

ஆந்திரமாநிலம் நகரி போலீசார் தடுக்குபேட்டை சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த 2 கார்களை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, 14 செம்மரக் கட்டைகள், மூன்று கத்திகள் ஆகியவை இருப்பது தெரியவந்தது. கார்கள் மற்றும் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, சென்னையை சேர்ந்த ராணுவ வீரரான சதீஷ், ஓட்டுநர் மைக்கேல், தங்கராஜ், குப்புசாமி, முருகன் ஆகியோரை கைது செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றும் சென்னையை சேர்ந்த சதீஷ், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த நிலையில், செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version