அருப்புக்கோட்டையில் நூதன முறையில் செல்போன் திருடும் கும்பல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நூதன முறையில் செல்போன் திருடும் கும்பலின் சிசிவிடி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வர்த்தக நிறுவனங்களுக்கு செல்லும் ஒரு நபர் அனாதை இல்லத்துக்கு நிதி திரட்டுவது போல கடைகளுக்கு சென்று உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். அவர்கள் நிதி கொடுக்கும்போது அதனை பெற்றுக் கொள்கிறார். பின்னர் அதற்கான ரசீது போன்ற ஒரு தாளினை மேஜை மீது நுணுக்கமாக வைக்கிறார். பெரும்பாலானோர் வேலை செய்யும் இடத்தில் தங்களது செல்போனை மேஜை மீது வைப்பது வாடிக்கையாகும். அவ்வாறு வைப்பதை நோட்டமிடும் அந்த நபர் செல்போனை எடுத்துக் கொண்டு நழுவி விடுகிறார். நூதன முறையில் திருடும் இந்த கும்பல் குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version