காதலர் தினத்தை தெறிக்க விட்ட சினிமா பிரபலங்கள்….

நயன்தாரா இளைஞர்களுக்கு கனவு கன்னி என்று சொல்லுவதை விட காதல் கன்னியாக மாறிவிட்டார்.ஆனால் நயன்தாரா மனதில் இருப்பது விக்னேஷ் சிவன் தான்.அனைவராலும் அதிகமாக பேசப்படும் காதல் ஜோடிகளில் இவர்களும் உண்டு.விக்னேஷ் சிவனும்,நயனும் கிறிஸ்துமஸ்,புத்தாண்டு என அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடிவிட்டு தவறாமல் அவற்றின் புகைப்படத்தினையும் சமூகவலைதளங்களில் பகிரவும் செய்வார்கள்.அது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகும்.அனைத்தையும் கொண்டாடுபவர்கள் காதலர் தினத்தை விடுவார்களா என்ன… காதலர் தினமான நேற்று விக்னேஷ் சிவன்,நயன்தாரா இருவரும் இருக்கும் ரொமண்டிக் ஆன புகைப்படத்தை பதிவிட்டு happy valentines day என குறிப்பிட்டிருந்தார் விக்கி.இவர்களின் திருமணத்தை எதிர்ப்பார்த்து தான் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இந்த நடிகர்களுக்கு கல்யாணம் ஆகுமா? ஆகாதா ? என்று நம்மையே வியக்க வைத்தவர்கள் தான் விஷால்,ஆர்யா,சிம்பு..திரைப்படத்தில் நடிப்பதில் இவர்கள் பிசியாக இருந்தாலும் வாழ்க்கை துணையை தேடுவதில் இவர்கள் ஓயவில்லை.சமீபத்தில் விஷால் தன் காதலியான அனிஷாவை திருமணம் செய்து கொள்ளபோவதாக ஜனவரி 16 அன்று ஒரு டுவீட்டை தட்டிவிட்டார்.ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷால் கமிட் ஆனதை தொடர்ந்து ஆர்யாவும் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் சாயிஷாவை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.விஷாலும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

காதலர் தினமான நேற்று புதிதாக கமிட் ஆன இரண்டு ஜோடிகளும் காதலர் தினத்தை கொண்டாடி அசத்தி இருப்பார்கள்.விஷால் அனிஷாவிற்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.இதே போல் டுவிட்டரில் ஜெயம் ரவியும் தனது மனைவியுடனான ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் ’எப்பொழுதும் திரைக்கு பின்னால் இருந்து என்னை வெற்றியாளானாக திரைக்கு முன்னால் இயக்கியது என் மனைவி தான்’ என குறிப்பிட்டு காதலுடன் தன் மனைவிக்கு வாழ்த்து தெரிவிந்திருந்தார்.

’நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்று கூறுவார்கள்.இப்பொழுதெல்லாம் ’காதலி அமைவதே இறைவன் கொடுக்கின்ற வரம்’ என மாறிவிட்டது.எப்படியோ விஷாலும்,ஆர்யாவும் லைஃப்ல கமிட் ஆகிவிட்டார்கள்.அடுத்தது சிம்புவின் காதலி யாருன்னு தெரிந்துகொள்வதற்கு தான் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Exit mobile version