கோழியை சிறுத்தை, பிடித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு !

கோவை அருகே உள்ள கணுவாய், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டமும் தென்பட்டு வந்தது. கணுவாயை அடுத்த சோமையம்பாளையம் யமுனா நகரில் அஸ்வின் என்பவரது கோழி பண்ணையில் அதிகாலை சுமார் 4 மணி அளவில் வந்த சிறுத்தை ஒன்று கோழியை பிடித்து சென்றுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Exit mobile version