திருச்சி வழக்கறிஞர் கோபிகண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

திருச்சியில் முன்விரோதமாக காரணமாக இளம் வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் கோபிகண்ணன். வழக்கறிஞரான இவர், தனது வீட்டின் அருகே தனது குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கற்றுகொடுத்து கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்கப்பட்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே கோபிகண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 2018 ஆம் ஆண்டு திருச்சி அரியமங்கலத்தில் நடந்த கொலை வழக்கு தொடர்பான முன்விரோதம் காரணமாக, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவத்தில், கொலையாளிகளை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, கோபிகண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version