சிசிடிவி கேமரா மூலம் மக்களுக்கு பாதுகாப்பான உணர்வு கிடைத்துள்ளது

சிசிடிவி கேமராவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார். தமிழகத்தில் சிசிடிவி கேமரா அதிகளவில் நிறுவப்படுவதால், குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குற்றவாளிகளை பிடிப்பதில் பெரும் பங்காற்றும் சிசிடிவி கேமராவின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதமாக மூன்றாவது கண் என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் குறுந்தகட்டின் வெளியீட்டு விழா வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு குறுந்தகட்டினை வெளியிட்டார். செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் குறுந்தகட்டினை பெற்றுக்கொண்டார். விழாவில் பேசிய விஸ்வநாதன் ஆனந்த், சிசிடிவி காரணமாக குற்றங்கள் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

Exit mobile version