நிர்பயா திட்டத்தின்கீழ் 534 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்

நிர்பயா திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேக்கு சொந்தமான 534 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் கல்சேஸ்த்ரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு ரயில் நிலையம் மற்றும் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு பணிமனைகளில் வருடாந்திர பணிகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்பயா திட்டத்தின் கீழ் 534 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக கூறினார்.

சேலம் கோட்டத்தில் 72 கேமராக்களை 2 மாத காலத்திற்குள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆளில்லா லெவல் கிராசிங் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கல்சேஸ்த்ரா தெரிவித்தார்.

Exit mobile version