நாடு முழுவதும் 150 ரயில்களை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக குழு அமைப்பு

நாடு முழுவதும் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பான திட்டத்தை உருவாக்குவதற்கான குழுவை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களை உலகத் தரத்தில் மேம்படுத்துவது மற்றும் உலகத் தரமுள்ள தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில்களை உருவாக்குவது ஆகியவை தொடர்பான திட்டங்களை வகுக்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் ரயில்வே வாரியத் தலைவர், நீதி ஆயோக் தலைவர், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலர், ரயில்வே வாரிய உறுப்பினர்கள் இடம்பெறவுள்ளனர்.

Exit mobile version