ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்த விவகாரம்: மேலும் ஒரு அதிகாரி பணியிட மாற்றம்

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 8 ஆம் தேதி மதுரை அருகே உள்ள கள்ளிக்குடியில் சிக்னல் மற்றும் மொழி பிரச்சினையால் ஒரே தண்ட வாளத்தின் எதிர் எதிரே இரு ரயில்கள் வந்தது. இதுகுறித்து ரயில்வே தலைமை பாதுகாப்பு அலுவலர் ஆர்.கே.மேத்தா தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தப்பட்டது.

இதில் அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என கூறி கள்ளிக்குடி ரயில் நிலைய அதிகாரி தீப் சிங், திருமங்கலம் ரயில் நிலைய அதிகாரி ஜெயக்குமார், கட்டுப்பாட்டு அதிகாரி முருகானந்தம் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்தநிலையில், மேலும், மதுரை கோட்ட இயக்க மேலாளர் பிரேம்குமாரை திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version