தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்

தமிழகம் முழுவதும் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் பணிஇடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருந்த மனோகரன் சென்னை பொருளாதார குற்ற பிரிவின் ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக சஞ்ஜெய் குமார், ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்ப்படை, 11-வது பட்டாலியனின் தலைவராக ஜெயந்தியும், மதுரை மாநகர குற்றப் பிரிவு துணை ஆணையராக செந்தில் குமாரும் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version