சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நான்கு நாட்கள் நடைபெற்ற போட்டியில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் ஆயிரத்து 200 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நாக் அவுட் முறையில் நடத்த நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பையுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Exit mobile version