சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

சி.பி.எஸ்.சி.இ. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாடு முழுவதும் இன்று துவங்குகிறது.

12 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதும்  சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.  இதற்காக 5 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்னதாகவே தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்  சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் 21 ஆம் தேதி தொடங்குகின்றன.

Exit mobile version