சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள்களை திருத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, விடைத்தாள்களை மதிப்பிடும் பணி இன்று தொடங்குகிறது.  விடைத்தாள்கள் நாடு முழுவதும் உள்ள மூவாயிரம் மையங்களில் இருந்து ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படும். ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்வார்கள் என்றும், 50 நாட்களில் இப்பணி முடிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு நிலுவை தேர்வுகள், ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version