குட்கா முறைகேடு வழக்கில் தேர்தல் டிஜிபியான அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற குட்கா முறைகேடு வழக்கில் அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் அசுதோஷ் சுக்லாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அசுதோஷ் சுக்லாவை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து அசுதோஷ் சுக்லா கடந்த 8ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.