கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் இடங்களில் சி.பி.ஐ. சோதனை

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சி.பி.ஐ. சோதனையில் சுமார் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முறைகேடாக சொத்துகள் வாங்கிய புகாரில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான 15 இடங்களில், சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவரது சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. சுரேஷ் வீடு உள்பட, கர்நாடகாவில் 9 இடங்களிலும், டெல்லி மும்பை உள்ளிட்ட மொத்தம் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் 50 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சி.பி.ஐ. சோதனை தொடர்பான முழு தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

Exit mobile version