சி.பி.ஐ. காவல் முடிந்து ப.சிதம்பரம் இன்று தனி நீதிமன்றத்தில் ஆஜர்

5 நாட்கள் சி.பி.ஐ. காவல் முடிந்து ப.சிதம்பரம் இன்று தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், மறுநாள் சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ப.சிதம்பரத்தை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் காவல் இன்றுடன் முடிவடைவதால், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை இன்று மாலை தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

Exit mobile version