ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை

ஐ.என்.எக்ஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து ப.சிதம்பரம் தரப்பில் கபில் சிபில் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகிய வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர். சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version