சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்யும் பணி தீவிரம்

சிபிஐ இயக்குநர் பதவிக்கு தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணியை மத்திய பணியாளர் பயிற்சித் துறை தீவிரப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா அந்த பதவியிலிருந்து தீயணைப்புத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் சிபிஐ இயக்குநர் பதவிக்கு தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதில் மும்பை காவல் ஆணையர் சுபோத்குமார் ஜெய்ஸ்வால், உத்தரப் பிரதேச காவல்துறை இயக்குநர் ஓ.பி.சிங், தேசிய விசாரணை முகமையின் தலைவர் ஒய்.சி.மோடி ஆகியோரின் பெயர்கள் முன்னிலையிலிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பெறும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் இருந்து ஒருவரை சிபிஐ இயக்குநராக பிதரமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version