உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ உட்பட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

உன்னாவ் இளம்பெண் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த 2017ம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்தில் சிக்கியது.

காரில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், கார் விபத்து சம்பவம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Exit mobile version