சிலை கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து 

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு மனு மீதான விசாரணையை நடத்தியது. விசாரணை முடிவில், சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version