சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை கிளை!

இதனிடையே, சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டதற்காக நீதிபதிகள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான விசாரணையில் நீதியை நிலைநாட்டி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை, சிபிசிஐடி-யின் நடவடிக்கை ஏற்படுத்தி இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Exit mobile version