பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகளை விரைந்து முடிக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் அறிவுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த பொத்தனூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான சரவணன், மனைவி, அவரது இரு குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் காவிரியாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்று சுழலில் சிக்கி 6 பேர் பலியாகினர். 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல்போன குழந்தை அஸ்விகாவின் உடலை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, மீட்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர். மீட்பு பணியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version