காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் நடப்பாண்டில் தொடங்கும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மக்களின் கோரிக்கையான காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை நடப்பாண்டில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாட்டத்தில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படவுள்ளதாக, ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்,  நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு  நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, விவசாயிகளின் தோழனாக அதிமுக அரசு உள்ளதாகத் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நூறாண்டு கோரிக்கையான காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆண்டு தொடங்கி வைப்பார் என்றும், இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

Exit mobile version