காவிரி கோதாவரி இணைப்பை அதிமுக அரசு நிறைவேற்றியே தீரும் : முதல்வர் எடப்பாடி

காவிரி கோதாவரி இணைப்பை அதிமுக அரசு நிறைவேற்றியே தீரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கருமந்துறையில் தேமுதிக வேட்பாளர் சுதீஷை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பின்னர், புத்திரகவுண்டம்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதல்வர், தேர்தலில் எதிரிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை வெத்து அறிக்கை என்று குறிப்பிட்ட முதல்வர், மக்களை ஏமாற்றும் வகையிலான அறிக்கை என்று தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியில் அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதல்வர் பட்டியலிட்டார்.

Exit mobile version